அசோக் காலிங் அசோக் – 8

(Sex Stories In Tamil - Ashok Calling Ashok 8)

Raja 2014-03-10 Comments

Sex Stories In Tamil – “ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ.. அவ ஏன் உன்னை லவ் பண்றா தெரியுமா..?”

“தெரியுமே.. நான் கொஞ்சம் ஹேண்ட்ஸமா..” நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, சீனியர் எரிச்சலுடன் இடைமறித்தார்.

“ஜூனியர்.. இந்த மெசின்தான் நான் இப்போ கண்டுபிடிச்சேன்..!! கண்ணாடி இருபத்து நாலு வருஷத்துக்கு முன்னாடிலாம் கண்டு பிடிச்சுட்டாங்க..!!”

1

“சரி.. வேற எதுக்கு என்னை லவ் பண்ணுனான்னு சொல்ற..?”

“ஏன்னா நீ ஒரு அப்பாவி.. அவ சொன்னதுக்குலாம் தலையை ஆட்டுவ.. அவ குணத்துக்கு தோதான ஆளுன்னு அவளுக்கு தெரியும்னு..”

“என்ன சொல்ற நீ..?”

“ம்ம்ம்ம்.. நீ எவ்ளோ அடிச்சாலும் தாங்குவன்னு அவளுக்கு தெரியும்.. அதான் உன்னை லவ் பண்றான்னு சொல்றேன்..!!”

“என்னய்யா ரொம்ப பயமுறுத்துற..?”

“பயமுறுத்தலை ஜூனியர்.. உன் லைஃப்ல வரப்போற கஷ்டத்தை சரி பண்ணிக்க.. இது ஒரு நல்ல சான்ஸ்..!! யூஸ் பண்ணிக்கோன்னு சொல்றேன்.. அவளை கழட்டிவிட்டுடுன்னு சொல்றேன்..!!”

“ம்ம்ம்ம்… சரி..!! எனக்கு கொஞ்சம் டைம் கொடு.. நான் கொஞ்சம் யோசிக்கணும்..”

“கொஞ்சம் என்ன.. நெறைய யோசி..!! எவ்ளோ வேணா டைம் எடுத்துக்கோ.. ஆனா.. நாளைக்குள்ள நம்பிடு..!!” அவர் அந்த மாதிரி சொன்னது எனக்கு காமடியாக இருந்தது. சற்றே கிண்டலான குரலில் கேட்டேன்.

“ஏன் சீனியர்.. லேகா உன்னை அடிக்கிறப்போ.. நெறைய அடி உன் தலைலேயே விழுமோ..?”

“ஆமாம்.. ஏன் கேக்குற..?”

“இல்ல.. எஃபக்ட் தெரியுது..!! எவ்ளோ வேணா டைம் எடுத்துக்கோன்ற.. அப்புறம் நாளைக்கே நம்பிடுன்ற..!! மூளைல முக்கியமான கேபிள்லாம் கட் ஆன எஃபக்ட்லையே பேசுற நீ..!!”

“ஐயோ ஜூனியர்.. நீதான் அவசரம் புரியாம பேசுற.. இன்னும் நாலு நாள்ல உனக்கு பேராப்பு வரப் போகுது..!! நீ சீக்கிரமா ஒரு முடிவுக்கு வரலை.. என் கதிதான் உனக்கும்..!!”

“ஆமாம்.. இது ஒண்ணை சொல்லிடுயா.. ‘பேராப்பு.. பேராப்பு..’ன்னு..!! சரி சரி விடு.. நான் நாளைக்கு என்னோட முடிவை சொல்றேன்..!!”

“ஓகே..!!”

கால் கட் செய்யப்பட்டதும், நான் படியிறங்கி என் ரூமுக்கு வந்தேன். ஜானி ‘பப்பரக்கா..!!’ என்று படுத்துக் கிடந்தான். தூக்கத்திலும் விடாமல் துடுப்பு போட்டுக் கொண்டிருந்தான். நான் அவனை கடந்து சென்று, என் ரூமுக்குள் நுழைந்து கொண்டேன். கட்டிலில் படுத்து கண்களை மூடிக் கொண்டேன்.

ராட்சசி என்று லேகாவை பற்றி சீனியர் சொன்ன மேட்டர்களே, ராட்டினம் போல மனதுக்குள் சுழன்று கொண்டிருந்தன. அவர் சொன்ன மாதிரி லேகாவை ஒரு அடங்காப்பிடாரியாக கற்பனை செய்து பார்க்கவே, மனம் மறுத்து மறியல் செய்தது. ஆனால்… அவர் சொன்னது மட்டும் உண்மையாக இருந்துவிட்டால்..???? நினைத்துப் பார்க்கவே உடம்பு பயத்தில் நடுங்கியது..!! சில்லிட்டுப் போன மாதிரி சிலிர்ப்பெழுந்து அடங்கியது..!! காலம் முழுதும் காட்டுத்தனமாய் அடி வாங்கவா அவளைக் கட்டிக் கொள்வது..??

அன்று இரவு லேகாவுடன் கடலை வறுக்கும்போதும், மனம் ஒன்றாமல்.. பட்டும் படாமல்.. கடலை கருகாமலே வறுத்தேன்..!!

அடுத்த நாள் லேகாவிடம் அவளுடைய கடந்தகால வாழ்க்கை பற்றி கேட்க நினைத்தேன். காலேஜ் முடிந்ததும், அவளை அழைத்துக் கொண்டு பீச் சென்றேன் (மொளகா பஜ்ஜி வாங்கி கொடுப்பா.. அஞ்சு மணிக்குலாம் போனா சூடா கிடைக்கும்..). ஆள் நடமாட்டம் அதிகமில்லாத இடமாக தேடிப் பிடித்து (ஹலோ.. இந்த துப்புற வேலைலாம் வச்சுக்காதீங்க.. எங்க கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும்..!!) நெருக்க்க்க்கமாக அமர்ந்து கொண்டோம். கொஞ்ச நேரம் பொதுவான கதைகள் பேசியவன் மெல்ல மேட்டருக்கு வந்தேன்.

“லேகா.. உன்கிட்ட ஒன்னு கேட்கனும்..”

“கேளு.. கிஸ் தவிர வேற என்ன வேணா கேளு..” அவள் கிண்டலான குரலில் சொல்ல,

“ஐயயே.. அதெல்லாம் வேணாம்…” என்று நான் சாதாரணமாகத்தான் சொன்னேன். அவளோ பயங்கர டென்ஷன் ஆனாள்.

“என்னது.. ஐயயேவா..? என் கிஸ் உனக்கு ஐயயேவா..? அதுக்குள்ளே நான் சலிச்சு போயிட்டானா..?”

“ஹே.. நான் அப்படி சொல்லவே இல்லையே..?”

“இல்ல இல்ல.. நீ அப்படித்தான் சொன்ன..?”

2

“நான் எங்கே சொன்னேன்..? நீதான் கிஸ் தரமாட்டேன்னு சொன்ன..?”

“நான் தரமாட்டேன்னு சொன்னா.. நீ விட்டுடுவியா..?? பேசாத போ..!!”

அவள் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டதும் இல்லாமல் வேறுபக்கம் வேறு திருப்பிக் கொண்டாள். நான் தலையை சொறிந்தவாறு தேமே என்று அமர்ந்திருந்தேன். இது என்னடா வம்பா போச்சு..? நான் என்ன பேச நினைத்தேன்.. இவள் என்ன செய்கிறாள்..? ஒரு பேச்சுக்கு ஐயயே என்றது ஒரு குத்தமா..? இதுகளை எல்லாம் காதலித்து..?? ச்சை..!!! இன்னைக்கு மொளகா பஜ்ஜி அவ்வளவுதானா..?? ம்ஹூம்.. விடக்கூடாது..!! மெல்ல எனது கையை அவளது தொடையில் வைத்து அழுத்தினேன்.

“ஸாரிடி லேகாக்குட்டி..!!”

“ப்ச்.. ஒன்னும் வேணாம் போ..!!” அவள் என் கையை தட்டிவிட்டாள்.

“சரி.. உன் ஆசை எனக்கு புரியுது..!! கிஸ் பண்ணனும்னு ஆசைப்பட்டுட்ட..!! பரவால.. கிஸ் பண்ணிட்டு போ..!!” சொல்லிக்கொண்டே நான் என் உதடுகளை பிதுக்கி அவள் முகத்துக்கு முன் காட்ட, அவளோ என் உதட்டிலேயே பட்டென அறைந்தாள்.

“ஆசையைப் பாரு.. உன் கிஸ்க்காக இங்க யாரும் தவிச்சுப் போய் கெடக்கலை..!! சரி.. நீ என்ன சொல்ல வந்தேன்னு சொல்லு..!!”

“அதுவா..??? அ…அது…”

“ம்ம்ம்.. சொல்லு..!!”

“நீ உன் பழைய காலேஜை விட்டுட்டு ஏன் வந்த..?” நான் பட்டென கேட்டேன்.

“அதான் சொன்னேனே.. ராகிங் ப்ராப்ளம்னு..!!”

“நெஜமாவே ராகிங் ப்ராப்ளம்தானா..?” நான் இப்போது கேள்வியை கொஞ்சம் ஷார்ப்பாக்கினேன்.

“ஆ..ஆமாம்.. ஏன் கேக்குற..?” அவளுடைய பதிலில் இப்போது லேசான தடுமாற்றம்.

“இல்ல.. என் பிரண்ட்ஸ்கிட்ட விசாரிச்சேன்.. அந்த காலேஜ்ல அப்டிலாம் எதுவும் ப்ராப்ளம் இல்லைன்னு கேள்விப்பட்டேன்.. அதான்..!!”

இப்போது லேகா பட்டென அமைதியானாள். என் முகத்தையே சில வினாடிகள் கூர்மையாக பார்த்தவள், பின்பு தலையை குனிந்து கொண்டாள். அவளுடைய செய்கையை கண்டு நான் குழம்பிக் கொண்டிருக்கும்போதே, அவளுடைய மூக்கு விசும்ப ஆரம்பித்தது. கண்ணீர் வராத கண்களை விரல்களால் துடைத்துக் கொண்டாள். அதற்கே நான் உருகிப் போனேன்.

“ஐயையோ.. என்ன லேகா குட்டி.. இதுக்கு போய் அழுவுற..? நான் ஏதாவது தப்பா கேட்டுட்டனா..?” கேட்டுக்கொண்டே நான் அவளுடைய கன்னத்தை பற்ற, அவள் என் கையை விலக்கினாள்.

“ப்ச்.. நீ தப்பாலாம் ஒன்னும் கேக்கலை..!! எனக்குத்தான் பழசுலாம் ஞாபகம் வந்துடுச்சு..!!”

“ப..பழசா..??? என்னது அது..???” நான் நடுங்கும் குரலில் கேட்டேன்.

“அ..அதை.. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை..”

“பரவால்ல லேகா.. சொல்லு..!!”

“நீ எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டியே..?”

“ச்சேச்சே.. நான் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டேண்டா.. சொல்லு..!!”

“எங்க காலேஜ்ல திவாகர்னு ஒரு பையன் இருந்தான் அசோக்..!!” அவள் ஒருமாதிரி சோகமான குரலிலேயே சொன்னாள்.

“சரி..!!” (அவன் மண்டைலதான் மாவுக்கட்டு போட வச்சியா..?)

“ஒண்ணா நம்பர் ரவுடி..!!”

“சரி..!!” (அப்போ நீதான் ரெண்டாம் நம்பரா..?)

“எனக்கும் அவனுக்கும் ஆகாது..!! போன வருஷம் என் பொறந்த நாளுக்கு அவன் என்ன பண்ணினான் தெரியுமா..?”

“என்ன பண்ணினான்..?”

“பர்த்டே கிஃப்டா.. எனக்கு ப்ராவும் ஜட்டியும் பார்சல் அனுப்பிட்டான்..!!”

“ஐயையோ..!! அப்புறம்..??” (அடப்பாவி சீனியர்.. இதை நீ சொல்லவே இல்லையே..?)

“நீயே சொல்லு.. எந்தப் பொண்ணுக்குத்தான் கோவம் வராது..?”

“ம்ம்.. வரும் வரும்..!!” (கோவத்துல நீ என்ன செஞ்ச.. அதை சொல்லு மொதல்ல..)

3

“அன்னைக்கு அவன் கம்ப்யூட்டர் லேப்ல இருந்தான்.. அவன்கிட்ட போய் ஏன் இப்டி பண்ணினேன்னு கேட்டேன்..!! அதுக்கு அவன்.. ‘அப்டித்தாண்டி அனுப்புவேன்.. நாளைக்கு அதை போட்டுக்கிட்டு காலேஜுக்கு வாடி’ன்னு திமிரா சொல்றான்..!! எனக்கு வந்துச்சே கோவம்..??”

“ஐயையோ.. என்ன பண்ணுன..?”

“கைல கெடைச்ச ஒரு மவுஸை எடுத்து அவன் மேல எறிஞ்சுட்டேன்..!!”

“மவுஸா…????” (இவ என்ன புதுசா ஒரு ஐட்டம் சொல்றா..?)

“யெஸ்.. அது.. அது.. இத்துனூண்டு.. சின்ன மவுஸ்தான் அசோக்..!!”

“ஓஹோ..??” (ஆமாம்.. மவுஸ்னா சின்னதாத்தான் இருக்கும்.. மானிட்டர்தான் கொஞ்சம் பெருசா இருக்கும்..)

“அதுக்கே அவனுக்கு மண்டை பொடைச்சுக்கிச்சு..!!”

“ம்ம்..!!” (பொடைச்சுக்கிச்சா.. பொளந்துக்கிச்சாடி..???)

“அதுக்கு.. அதுக்கு… என்னை காலேஜ்ல இருந்து அனுப்பிட்டாங்க அசோக்..!! அவன் அப்பா அந்த காலேஜ் மேனேஜ்மண்ட்ல பெரிய ஆளு..!! எல்லாரும் சேர்ந்து பாலிட்டிக்ஸ் பண்ணி.. என்னை வெளில அனுப்பிட்டாங்க..!! என் படிப்பை ஸ்பாயில் பண்ணிட்டாங்க..!!”

Comments

Scroll To Top