நெஞ்சோடு கலந்திடு – 23

(Tamil New Sex Stories - Nenjodu Kalanthidu 23)

Raja 2014-01-23 Comments

அசோக் சொல்லி முடித்துவிட்டு, திவ்யாவின் முகத்தையே அமைதியாக பார்த்தான். அவள் சொல்லப் போவதை வைத்துதான்.. திவ்யாவுடனான தன் நட்பும் தொடரப் போகிறது என்ற அபாயமும்.. அவன் இதயத்தை ட்ரம்ஸ் வாசிக்க செய்தது. திவ்யா கண்களில் நீர் கசிய, தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். இது தன் வாழ்வின் மிக முக்கியமான முடிவு என்பதை அவளும் இப்போது நன்கு உணர்ந்திருந்தாள். அசோக்கின் முகமும், திவாகரின் முகமும் மாறி மாறி அவளது மனக்கண்ணில் வந்து போயின.

ஒரு அரை நிமிடம் திவ்யா அந்த மாதிரி அமைதியாக யோசித்திருப்பாள். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவளாய், கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள். அசோக்கின் முகத்தை ஏறிட்டு பார்த்து தெளிவாக சொன்னாள்.

“ஓகே அசோக்.. நீ சொல்றதை நான் நம்புறேன்..!! அவரை விட்டு விலகிடுறேன்..!!”

திவ்யா சொன்னதும் அசோக் அப்படியே முகம் மலர்ந்து போனான். அவன் மனதில் ஒரே நேரத்தில் நிம்மதியும், சந்தோஷமும் போட்டி போட்டுக்கொண்டு பொங்கி வழிந்தன. தன் வாழ்க்கையையே அவன் கையில் ஒப்படைக்க துணிந்த அவனது தோழியை மிகவும் பெருமிதமாக பார்த்தான். நெஞ்சுக்குள் ஒரு உணர்ச்சி ஊற்று பீறிட்டு கிளம்பியது. உதடுகளை கடித்து அந்த உணர்சிகளை அடக்கிக் கொண்டான்.

“தே..தேங்க்ஸ் திவ்யா.. தேங்க்ஸ்..!!” என வார்த்தை வெளியே வராமல் தடுமாறினான்.

“நீதான் எனக்கு முக்கியம் அசோக்..!! சொல்லு.. நான் என்ன பண்ணனும்..?”

“சொல்றேன்.. மொதல்ல இந்த சிம்மை கழட்டி தூரமா போடு.. வேற நம்பர் மாத்திக்கோ..!!”

“ம்ம்..”

“அவருக்கு ஃபைனலா ஒரு மெயில் அனுப்பிச்சுடு..!! ‘நான் உங்களை லவ் பண்ணலை.. அன்னைக்கு நீங்க சூசயிட் பண்ணிக்கிறேன்னு மிரட்டுனதுல நான் குழம்பி போய் அப்படி சொல்லிட்டேன்.. இப்போ நான் தெளிவாயிட்டேன்.. நீங்க எனக்கு வேணாம்.. தயவு செய்து என்னை இனி தொந்தரவு செய்யாதீங்க.. என்னை நிம்மதியா இருக்க விடுங்க.. நான் எந்த வகைலயாவது உங்களுக்கு கஷ்டம் கொடுத்திருந்தா என்னை மன்னிச்சுடுங்க..’ அப்டின்னு ஒரு மெயில் அனுப்பிச்சுட்டு.. அந்த மெயில் ஐடியும் க்ளோஸ் பண்ணிடு..!! அவர் என்ன ரிப்ளை பண்ணிருக்கார்னு பார்க்க கூட அதை ஓப்பன் பண்ணாத..!!”

“ம்ம்.. சரி.. ஆனா அவர் எப்படியும் என்னை காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணுவாரு..!!”

“கண்டிப்பா பண்ணுவாரு.. எனக்கும் தெரியும்.. உன்னை அவ்வளவு சீக்கிரமா அவர் விட மாட்டார்..!! நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ திவ்யா.. இது ரொம்ப ரொம்ப முக்கியம்.. எந்த காரணம் கொண்டும் அவர் கூட நீ பேசக்கூடாது.. அவர்கிட்ட பேசினா நிச்சயமா உன்னை குழப்பிடுவாரு..!! அவர் உன்னை தேடிவந்தா முகம் கொடுத்து பேசாத.. மூஞ்சில அடிச்ச மாதிரி பேசி அனுப்பிடு..!! கொஞ்ச நாள்ல அவரோட முயற்சியை அவர் கை விட்ருவாரு.. அப்புறம் உனக்கு எதுவும் பிரச்னை இல்லை.. புரியுதா..?”

“ம்ம்.. சரிடா..!! புரியுது..!!” திவ்யாவின் குரல் சோகமாக ஒலிக்க, அசோக் அவளுடைய தோளைப் பற்றி தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

“இங்க பாரு திவ்யா.. நீ சரியான முடிவுதான் எடுத்திருக்குற.. அதுக்காக சந்தோஷப்படு..!!”

“ம்ம்ம்ம்..” திவ்யா புன்னகைக்க முயன்று தோற்றாள்.

“நான் உன்கூட இருக்கேன் திவ்யா.. நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்குத்தான் செய்வேன்.. எல்லாம் நான் பாத்துக்குறேன்..!!”

“ம்ம்.. நீ இருக்குற தைரியத்துலதான்.. நான் இருக்கேண்டா அசோக்..!!”

சொல்லிவிட்டு திவ்யா அசோக்கின் தோளில் சாய்ந்து கொள்ள, அவன் அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான். Koothi Tamil New Sex Stories

– தொடரும்

நெஞ்சோடு கலந்திடு – 23

What did you think of this story??

Comments

Scroll To Top