கண்ணாமூச்சி ரே ரே – 52

(Tamil Hot Sex Stories - Kannamoochi Rae Rae 52)

Raja 2014-07-04 Comments

“எ..என்னம்மா ஆதிரா.. என்னாச்சு..??” பதற்றமாக கேட்டார்.

“தா..தாமிரா.. தாமிரா..” அதிர்ச்சியில் வார்த்தை வராமல் திணறினாள் ஆதிரா.

“தாமிரா..??”

“தா..தாமிராவோட குரல்..”

“என்னது..??”

“தா..தாமிரா.. தாமிரா எங்கிட்ட பேசினா அங்கிள்..!!” ஒருவழியாக ஆதிரா சொல்லிமுடிக்க,

“தாமிராவா..????”

செம்பியன் குழப்பமும், திகைப்புமாய் பார்த்தார்..!! அவருக்கு எதுவும் புரியவில்லை.. அவரது முகம் ஒருமாதிரி வெளிறிப்போய் வெறுமையாக காட்சியளித்தது..!!

‘இந்த ரூமை இப்போ யாரும் யூஸ் பண்றது இல்ல.. தாமிராதான் அப்பப்போ இங்க வந்து அடைஞ்சுப்பா..’

சற்றுமுன்பு தணிகைநம்பி சொன்னது நினைவுக்கு வர.. அந்த அறைக்குள் ஆங்காங்கே சிதறிக்கிடந்த தாமிரா சம்பந்தப்பட்ட பொருட்களையே, ஒருவித மிரட்சியுடன் பார்த்தார் செம்பியன்..!! என்ன நடந்திருக்கக்கூடும் என்று ஓரளவு அவருக்கு பிடிபட்டது.. ஆனால் அதுவும் முழுதாக தெளிவுபடவில்லை..!! தனது தங்கை ஆவியாக வந்து தன்னை அணுகியிருக்கிறாள் என்பது ஆதிராவுக்கு தெளிவாக புரிந்திருந்தது.. அதேநேரம்.. பளிங்குப் பாத்திரத்துக்குள் தோன்றிய அந்த சிவப்பு அங்கி உருவத்தை நினைத்து அவளது சிந்தனையில் ஒரு குழப்பம்..!!

அந்த அறையின் தட்பவெட்பம் இப்போது பட்டென மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியிருந்தது.. மகிழம்பூ வாசனை காணாமல் போயிருந்தது.. காற்றின் ஈரப்பதம் வற்றிப் போயிருந்தது.. அறைக்குள் மறுபடியும் அந்த அனல் காற்றும், புழுங்கல் நெடியும்..!!

ஆதிராவும் செம்பியனும் அந்த ரகசிய அறையைவிட்டு வெளியே வந்தனர்..!! இன்றே இன்னொருமுறை ஆவியை வரவழைப்பது சாத்தியமில்லாத காரியம் என்றார் செம்பியன்.. முடிந்தால் நாளை இன்னொருமுறை முயற்சி செய்து பார்க்கலாம் என்றுவிட்டு, அங்கிருந்து கிளம்பிச்சென்றார்..!! அவர் போனபிறகு.. உள்ளே நடந்த விஷயங்களை மற்றவர்களுக்கு சுருக்கமாக சொல்லிமுடித்தாள் ஆதிரா.. அவள் சொன்னதையெல்லாம் அதிர்ச்சியாகவும், நம்பமுடியாமலும் கேட்டுக்கொண்டிருந்தனர் தணிகைநம்பியும், வனக்கொடியும்..!!

அறைக்குள் நேர்ந்த நிகழ்வினால் ஆதிரா மிகவுமே தளர்ந்து போயிருந்தாள்.. அப்படியே சோபாவில் வீழ்ந்து எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..!! வனக்கொடியும் தணிகைநம்பியும் ஆளுக்கொரு மூலையில் சோகமாக உறைந்திருந்தனர்..!!

தாமிரா காணாமல்போய் ஒருவருடம் ஆகிறது.. அவள் இன்னும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் மிக மிக குறைவு என்பது.. ஆதிரா முன்னமே அறிந்த ஒன்றுதான்..!! ஆனால்.. தங்கையின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில்.. அவள் உயிரோடு இருக்கவும் சிறிதளவு வாய்ப்பு இருக்கிறது என்று.. ஆதிராவின் உள்மனதுக்குள் ஒரு நம்பிக்கைத்துளி எப்போதும் ஒட்டிக்கொண்டிருந்தது..!! அந்த நம்பிக்கையும் இப்போது தகர்ந்து போயிருக்க.. அவளது இதயத்துக்குள் ஒரு இனம்புரியாத வலி..!!

சோபாவில் சுணங்கிக் கிடந்த ஆதிராவுக்கு.. சுவற்றில் அறையப்பட்டிருந்த தாமிராவின் புகைப்படம் ஒன்று, எதேச்சையாக பார்வையில் பட்டது..!! தங்கையின் மீதான பாசம் அவளது மனதுக்குள் சர்ரென ஊற்றெடுக்க.. அவளையும் அறியாமல் சோபாவைவிட்டு மெல்ல எழுந்தாள்.. அந்த புகைப்படத்தை நெருங்கினாள்..!! கள்ளம் கபடம் இல்லாத ஒரு வெள்ளைச்சிரிப்பை சிந்திக்கொண்டிருந்த தாமிராவின் முகத்தையே.. சில வினாடிகள் அன்பொழுக பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதிரா.. அவளது கண்களில் முணுக்கென்று ஒருதுளி கண்ணீர் எட்டிப் பார்த்தது..!!

தங்கையின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த ஆதிரா திடீரெனத்தான் அதை கவனித்தாள்.. அவள் ஏற்கனவே பலமுறை பார்த்த புகைப்படம்தான்.. இப்போதுதான் அந்தவிஷயம் அவளது புத்தியை சுருக்கென தைத்தது..!! புகைப்படத்தில் தாமிரா அணிந்திருந்த அந்த டி-ஷர்ட்.. அதில் அகலமாய் வாய் திறந்து கர்ஜித்துக் கொண்டிருந்த ஒரு காட்டுப்புலி.. அதன் கீழே பெரிதாக மின்னிய அந்த வாசகம்..!!

“SAVE THE TIGERS..!!”

அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் சோர்ந்து போயிருந்த ஆதிராவின் மூளை, இப்போது படக்கென விழித்துக்கொண்டது.. தாமிராவோடு தொடர்புடைய பழைய சம்பவங்களை பரபரவென மனதுக்குள் ஓட்டிப்பார்த்தது..!!

“ப்ச்.. சாப்பிட்டுட்டு போகட்டுமே விடு.. ஏன் விரட்டுற..??” – மொட்டைமாடி வடகத்தை, கொத்த வந்த காகத்தை, ஆதிரா விரட்டியடித்தபோது, அக்காவை கடிந்துகொண்டு தாமிரா சொன்னது.

“இனிமே அதை வளக்குறேன் இதை வளக்குறேன்னு எதையாவது வீட்டுக்கு தூக்கிட்டு வா.. அப்ப இருக்கு உனக்கு.. கை ரெண்டையும் வெட்டி அடுப்புல வைக்கிறனா இல்லையான்னு பாரு..!!” – தாமிரா பத்து வயது சிறுமியாக இருந்தபோது, அவள் ஆசையாக வளர்த்த முயல் இறந்துபோக, அந்த சோகத்தில் சாப்பிடாமல் பட்டினி கிடந்தவளை, அவளது அம்மா பூவள்ளி திட்டி தீர்த்தது.

“வாவ்…!! எவ்வளவு அழகா இருக்கு பாரேன்..!!” – டிவியில், சேற்றுக்குள் கிடந்து கர்ணகொடூரமாக வாயைப்பிளந்த முதலையை, கண்கொட்டாமல் பார்த்து ரசித்தவாறு தாமிரா சொன்னது. Uncle Sunni Tamil Hot Sex Stories

– தொடரும்

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top